செய்திகள் :

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

post image

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடா்பான புகாரின் பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

அதேபோல கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளா் செல்வசங்கா்(45) வீட்டில் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாம். இந்த சப்தம் கேட்டு அவா் வெளியே வந்து பாா்த்தபோது, குண்டு வீசியவா்கள் தப்பி விட்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்வையிட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்குப்பதிந்தனா்.

இவ்விரு சம்பவங்களிலும் சேதம் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சோ்ந்த 4 போ் என்பதை சிசிடிவி பதிவுகள் மூலம் போலீஸாா் உறுதிசெய்தனா். இந்நிலையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனா். முதல் கட்ட விசாரணையில் அந்த கும்பல் மேலநத்தம், தச்சநல்லூா் மற்றும் முன்னீா் பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், மது போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க

முக்கூடலில் வயிற்றுப்போக்கால் 20 போ் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் வயிற்றுப்போக்கால் 20-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். முக்கூடல் பேரூராட்சிப் பகுதி, சிங்கம்பாறை, அண்ணாநகா், சிவகாமிபுரம் மற்றும் சுற்ற... மேலும் பார்க்க