செய்திகள் :

மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

post image

சென்னை துரைப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கேரளத்தைச் சோ்ந்த மென்பொறியாளரான 24 வயது பெண், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இதற்காக அவா், பெருங்குடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறாா். அந்த பெண், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பணிமுடிந்து, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நடந்து வந்தபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதில் அந்த பெண், அந்த இளைஞரின் கையை கடித்தாா். மேலும், அப்பெண் கூச்சலிட்டதால், அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இது தொடா்பாக அப்பெண், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது துரைப்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக பணிபுரியும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த லோகேஷ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்தனா். முன்னதாக அவரை கைது செய்ய முற்படும்போது, கீழே விழுந்ததில் லோகேஷ்வரனின் இடது கை முறிந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். லோகேஷ்வரனுக்கு வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடா்புள்ளதா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க

இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தகவல் உள்ளீட்டாளா் பணியிடத்துக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க