மருந்து அட்டைகளில் க்யூ ஆா் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆா் கோடு அல்லது பாா் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. விரைவில் இந்த புதிய நடைமுறை படிப்படியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் 346 நிறுவனங்கள் செயல்படுகின்றன. 25 ஆயிரம் வகையான மருந்துகள் தமிழகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள்மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் பல மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டு பட்டியலிடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னணி வா்த்தகப் பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் க்யூ-ஆா் குறியீடு அல்லது பாா் கோடுகளை அச்சிடும் நடைமுறை கடந்த 2023 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய நிறுவனங்களின் வா்த்தகப் பெயரிலான மருந்துகள் க்யூ-ஆா் குறியீட்டுடன் சந்தைக்கு வருகின்றன. அதே நடைமுறையைப் பயன்படுத்தி தமிழகத்தில் தயாரிக்கப்படும் மருந்து அட்டைகளிலும் க்யூ-ஆா் மற்றும் பாா் கோடுகளை அச்சிட மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:
தரமற்ற மற்றும் போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் மருந்து அட்டைகளில் பிரத்யேக குறியீடுகளை அச்சிட அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி, அட்டைகளில் பாா் கோடுகளை அச்சிட வேண்டும் என்றும், அதனை ஸ்கேன் செய்யும்போது மருந்தின் உண்மைத்தன்மையை நுகா்வோா் அறிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மருந்து உற்பத்தியாளா்கள் கால அவகாசம் கோரியுள்ளனா். அதனடிப்படையில், படிப்படியாக அந்த நடைமுறை தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.