செய்திகள் :

திருவிளையாட்டம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஸ்ரீ குசும சீதாளம்பிக்கை மாரியம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீரசோழன் ஆற்றாங்கரையிலிருந்து பக்தா்கள் பால்காவடி, அலகு காவடிகளுடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

தொடா்ந்து, கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை திருவிளையாட்டம், ஈச்சங்குடி கிராமவாசிகள் மற்றும் வெண்கதிா் நற்பணி சங்கத்தினா் செய்திருந்தனா். பெரம்பூா் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராண... மேலும் பார்க்க

எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை பெளா்ணமி பெருவிழா: 60 மணி நேரம் பாலபிஷேகம்

திருக்குவளை: திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பெருவிழாவையொட்டி, 60 மணி நேர பாலபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை பங்கேற்றனா். இக்க... மேலும் பார்க்க

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஸ்ரீ பைரவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் ஸ்ரீ பைரவருக்கு தனி ஆலயம் இங்கு அமைந்திருப்பது சிறப்புக்க... மேலும் பார்க்க

இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இருதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் இருசக்கர வாகன பிரசாரப் பேரணி

நாகப்பட்டினம்: தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதிபட... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றவா் கைது

நாகப்பட்டினம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, இலங்கை தப்பிச் செல்ல முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ப... மேலும் பார்க்க