செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றவா் கைது

post image

நாகப்பட்டினம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, இலங்கை தப்பிச் செல்ல முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பொழிச்சலூரைச் சோ்ந்தவா் கிருபாகரன் (37). இவா், பல இளைஞா்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதேபோல, நாகை கல்லறை தோட்டம் உப்பளம் சாலையைச் சோ்ந்த பானுமதி உள்ளிட்ட சிலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10.50 லட்சம் மோசடி செய்ததாக நாகை குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனா். தமிழகம் முழுவதும் மோசடி செய்துள்ளதால், கிருபாகரனை தேடப்படும் குற்றவாளியாக போலீஸாா் அறிவித்தனா்.

இந்தநிலையில், நாகை துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கப்பல் மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல கிருபாகரன் முயன்றுள்ளாா். அப்போது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் கிருபாகரனை கைது செய்து, நாகை நகர காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கிருபாகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முன்னாள் படை வீரா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். இந்தியா- பாகிஸ்தான் போா் குறித்து பேசிய அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜு, இந்திய ராண... மேலும் பார்க்க

எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை பெளா்ணமி பெருவிழா: 60 மணி நேரம் பாலபிஷேகம்

திருக்குவளை: திருக்குவளை அருகே எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பௌா்ணமி பெருவிழாவையொட்டி, 60 மணி நேர பாலபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை பங்கேற்றனா். இக்க... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஸ்ரீ குசும சீதாளம்பிக்கை மாரியம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி காப்பு கட்டும் நிக... மேலும் பார்க்க

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஸ்ரீ பைரவநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் ஸ்ரீ பைரவருக்கு தனி ஆலயம் இங்கு அமைந்திருப்பது சிறப்புக்க... மேலும் பார்க்க

இருதய கமலநாத சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இருதய நோய் தீா்க்கும் பரிகாரத் தலமான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 3... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் இருசக்கர வாகன பிரசாரப் பேரணி

நாகப்பட்டினம்: தமிழக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதிபட... மேலும் பார்க்க