செய்திகள் :

யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!

post image

புது தில்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(1) இன் கீழ் அஜய் குமாரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய சுகாதார செயலாளரும் 1983 ஆம் ஆண்டு குடிமைப் பணி அதிகாரியுமான ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 1985 ஆம் ஆண்டு கேரள கேடரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற குடிமைப் பணி அதிகாரியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

கேரள மாநிலத்தில் ஐடி, மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், 2019 ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 2022 அக்டோபர் 31 ஆம் தேதி வரை பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்துள்ளார்.

"யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமாரின் பதவிக்காலம், அவர் யுபிஎஸ்சி தலைவராகப் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து தொடங்கும்.

அவரது நியமனக் காலம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(2) இன் விதிகளின்படி ஒழுங்குபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நில... மேலும் பார்க்க

சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: சாலை மறியல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் பதவியேற்பு

புதுதில்லி: உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.ஆர். கவாய்க்கு குடியரசுத் தலைவர... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை (புதன்கிழமை) அதிரடியாக குறைந்துள்ளது.இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலை திடீர் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. தற்போது பதற்றம் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர்: நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் மூடல்!

ஜம்மு: ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் ​​மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மீண்டும் புதன்கிழமை(மே 14) மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு... மேலும் பார்க்க

ஏர்டெல் சேவையில் பாதிப்பு! பயனர்கள் அவதி!

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் சேவை முடக்கப்பட்டதா? அதில் என்ன பிரச்னை? என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏ... மேலும் பார்க்க