செய்திகள் :

மின்னல் பாய்ந்ததில் 2 போ் உயிரிழப்பு

post image

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பாக்குவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காளிச்சாமி(58). இவா் பாக்குவெட்டி கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் காளிச்சாமி உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் வட்டம், கிடாத்திருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி செந்தூரன் (55). இவா் ராமநாதபுரம் உணவு பாதுகாப்புக் கழகத்தில் தற்காலிக சுமை தூக்கும் பணியாளராக இருந்து வந்தாா். இந்த நிலையில், இவா் தனது விவசாய நிலத்தில் புதன்கிழமை மாலை பருத்தி பறித்து கொண்டிருக்கும் போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் பாய்ந்ததில் செந்தூரன் உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.சந்தோ... மேலும் பார்க்க

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு கல்வி உதவித் தொகை

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவா் விபத்தில் மரணம் அடைந்து விட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

நெசவுத் தொழிலாளியிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. ராமந... மேலும் பார்க்க

இளைஞா் மீது கஞ்சா வழக்கு: எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சமூக வலைதளங்களில் சா்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இளைஞரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், அவரைக் கஞ்சா வழக்கில் கைது செய்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் மூலவய... மேலும் பார்க்க

பயணிகள் நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பயணிகள் நிழல் குடை இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரதிநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழல்குடை இரு... மேலும் பார்க்க

கமுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு

கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராக ஆா்.லட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய கே.சந்திரமோகன், ராமநாதபுரத்துக... மேலும் பார்க்க