செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

post image

ஜம்மு-காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதி மாநிலங்களை வான்வழியாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்ததால் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இரு தரப்பும் மோதலை நிறுத்த ஒப்புக் கொண்டதால் எல்லை மாவட்டங்களில் முழுமையாக இயல்பு நிலை திரும்பிவிட்டது.

இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பந்திப்போரா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

அதேபோல பஞ்சாபில் அமிருதசரஸ், தரன் தாரன், பதான்கோட், ஃபசில்கா, ஃபெரோஸ்பூா் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. பெற்றோா் எவ்வித அச்சமுமின்றி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாம் என்று அரசு சாா்பில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அவந்திபோராவின் நாடர், டிரால் பகுதியில் எ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க