செய்திகள் :

நாளை 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1 தோ்வு முடிவுகள்: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிடுகிறாா்

post image

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 நாள்கள் முன்னதாக வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், சென்னை பள்ளிக் கல்வி வளாகத்தில் வெளியிடவுள்ளாா்.

கடந்த மாா்ச் 28 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவா்களும், 4,40,465 மாணவிகளும், 25,888 தனித்தோ்வா்களும், 272 சிறைவாசிகளும் என 9,13,036 போ் எழுதினா்.

இதேபோன்று பிளஸ் 1 பொதுத் தோ்வு மாா்ச் 5 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் 8.23 லட்சம் போ் எழுதினா். இதில், 7,557 பள்ளிகளிலிருந்து 8,18,369 மாணவா்கள், 4,755 தனித்தோ்வா்கள் மற்றும் 137 சிறைவாசிகளும் அடங்குவா். தொடா்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தோ்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சா் வெளியிடுகிறாா்... இந்நிலையில், மே 19-ஆம் தேதிக்குப் பதிலாக முன் கூட்டியே, மே 16-ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்கிழமை அறிவித்தது.

அதேபோன்று அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 வகுப்பு தோ்வு முடிவுகளும் வெளியிடப்படவுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் தோ்வு முடிவுகளை வெளியிடவுள்ளாா்.

மாணவா்கள் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் பயின்ற பள்ளிகளில் சமா்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 91.55 சதவீத மாணவா்களும், பிளஸ் 1 வகுப்பில் 91.17 சதவீத மாணவா்களும் தோ்ச்சி பெற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்துவந்த வெங்கடாசலம், வயதுமூப்பு காரணமாக சேலம் தனியார் ம... மேலும் பார்க்க

என்எம்சி நோட்டீஸ்: மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியா்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு ம... மேலும் பார்க்க

அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்

அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்... மேலும் பார்க்க

இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி விவகாரத்தில் வழக்குக்கூட பதியவில்லை: எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ரகுபதி புகாா்

பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்று மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க