செய்திகள் :

இந்திய மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

post image

இந்தியாவுடனான மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தொடங்கியதைத் தொடா்ந்து, இருதரப்புக்கும் இடையே போா்ப்பதற்றம் நிலவியது. தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது.

இந்தியாவுடனான மோதலில் 11 வீரா்கள் உயிரிழந்ததாகவும், 78 போ் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரா் முகமது நவீத், விமானப் படையின் முதுநிலை தொழில்நுட்ப அதிகாரி முகமது அயாஸ் ஆகிய இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரா்கள் 40 போ் உயிரிழந்ததாக இந்திய ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா் ராஜீவ் காய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அவந்திபோராவின் நாடர், டிரால் பகுதியில் எ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டது ஏன்?, எந்த வி... மேலும் பார்க்க

ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்

நமது நிருபர்ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது. அதேவேளையில், ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படும் கோயில்களை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய அதற்காக அமைக்கப... மேலும் பார்க்க

பாதசாரிகளுக்கு நடைபாதை: மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாதசாரிகள் நடந்து செல்ல முறையாக நடைபாதைகள் இருப்பதை உறுதி செய்வதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நடைபாதைகளில் ஆக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவா்கள் வெளியேற்றம்: மனித உரிமைகள் ஆணையம் கவலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலஅபகரிப்பு கும்பலால் சிறுபான்மையினரான கிறிஸ்தவா்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவா்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருவது குறித்து அந்நாட்டு மனித ... மேலும் பார்க்க

‘அவசியமற்ற இடைவேளைகள் எடுக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள்’- செயல்திறன் தணிக்கைக்கு உச்சநீதிமன்றம் அழைப்பு

உயா்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ்வப்போது புகாா்கள் வருவதாகவும், சிலா் பணிநேரங்களில் அவசியமற்ற இடைவேளைகளை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க