செய்திகள் :

10th Result: இணை பிரியாத இரட்டை சகோதரிகள்; இருவருக்கும் 474 மதிப்பெண்கள்.. அசத்தல் ஒற்றுமை..!

post image

கோவையில், திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சுந்தரராஜன் – செல்வி தம்பதியினர் உள்ளனர். இவர்களின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தனர்.

மதிப்பெண்
மதிப்பெண்

இந்நிலையில் இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், இரட்டை சகோதரிகள் இரண்டு பேரும் 474 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.

முக்கியமாக கணிதம் பாடத்தில் இரண்டு பேரும் சொல்லி வைத்ததை போல 94 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதுகுறித்து இரட்டை சகோதரிகள் கனிஹா மற்றும் கவிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோவை இரட்டை சகோதரிகள்

“நாங்கள் இருவரும் ஓரளவுக்கு நன்றாக படித்தோம். ஆனாலும் இவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. 

மேலும், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுப்போம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. கடவுளின் கிருபையால் இது நிகழ்ந்துள்ளது. ஆசிரியர்கள் நன்கு உதவினார்கள். 11, 12-ம் வகுப்பில் நாங்கள் இருவரும் பயோ மேக்ஸ் பிரிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

கோவை இரட்டை சகோதரிகள்

10-ம் வகுப்பை போல 12-ம் வகுப்பு தேர்விலும் நல்ல மதிப்பெண் வாங்குவோம். அனைவருக்கும் நன்றி.” என்றனர்.

SSLC Exam: `` சிவகங்கை முதலிடம்; வெற்றிக்கு காரணம்..'' - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி

பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.அதுமட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் 97.49 சதவிகிதம் தேர்ச்சி வி... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்கள்..

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 மு... மேலும் பார்க்க

+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு முடிவில் மா... மேலும் பார்க்க

வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்: 'என்ன படிக்கலாம் என்பதில் குழப்பமா?'- இதோ உங்களுக்கான தகவல் மைய எண்!

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரிந்துவிடும். தேர்வு முடிவு தெரிந்த பின்பும், 'என்ன படிக்கலாம்?', 'எந்தக் கல்லூரியி... மேலும் பார்க்க

வழக்கறிஞராகும் கனவு; 76 வயதில் 12-வது வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி!

மகாராஷ்டிராவில் 12வது வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வை மும்பை நைகாவ் பகுதியை சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கோரக்நாத் மோரே என்பவரும் எழுதி இருந்தார். கோரக்நாத் 3... மேலும் பார்க்க