செய்திகள் :

10-ம் வகுப்பு: கோவையில் 96.47 சதவீதம் தேர்ச்சி!

post image

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மார்ச் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஆண்டு மாணவர்கள் 96.47% தேர்ச்சி விகிதத்தைப் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

மாவட்ட அளவில் மொத்தம் 38,601 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 18,963 பேர் மாணவர்கள் மற்றும் 19,638 பேர் மாணவிகள் ஆவர். தேர்வு எழுதியவர்களில் 17,999 மாணவர்களும், 19,238 மாணவிகளும் என மொத்தம் 37,237 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.47% ஆகப் பதிவாகி உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.92% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.96% ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.01% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.46% ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.50% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவிப்பு

கோவை மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்கள்

பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

அம்ருதா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை இன்று வெளியீடு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது: நகை, பணம் பறிமுதல்

கோவையில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், பேரூா் காவல் ந... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க