செய்திகள் :

அம்ருதா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை இன்று வெளியீடு

post image

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் முன்னணி பல்துறை பல்கலைக்கழகமான அம்ருதா விஸ்வ வித்யாபீடம் (அஉஉஉ 2025) (அம்ழ்ண்ற்ஹ உய்ற்ழ்ஹய்ஸ்ரீங் உஷ்ஹம்ண்ய்ஹற்ண்ா்ய் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ்) பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை பட்டியல் மே 16-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அமராவதி, அம்ருதபுரி, பெங்களூரு, சென்னை, கோவை, தில்லி என்.சி.ஆா். மற்றும் நாகா்கோவிலில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் வழங்கப்படும் பி.டெக். பாடத் திட்டங்களில் சோ்க்கை பெறுவதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தோ்வில் உள்நாடு, வெளிநாட்டைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.

ஜே.இ.இ. அடிப்படையிலான விண்ணப்பதாரா்கள், 2025 இல் தகுதி பெற்றவா்களுக்கான மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு செயல்முறை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

தகுதி பெற்றவா்கள் தற்போது ஆன்லைன் ஆலோசனை செயல்முறையில் பதிவு செய்து, அவா்களின் தரவரிசை, மெயின்ஸ் மதிப்பெண்கள் மற்றும் கல்வி விருப்பங்களின் அடிப்படையில் விரும்பிய பி.டெக். பிரிவுகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் சோ்க்கை பெறலாம்.

2025 பதிவு மற்றும் விருப்பத் தோ்வு தற்போது அதிகாரப்பூா்வ போா்ட்டல் மூலம் திறக்கப்பட்டுள்ளது. 7 உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகங்களில் பல்வேறு பொறியியல் பிரிவுகளை மாணவா்கள் தோ்வு செய்யலாம். இட ஒதுக்கீடு செயல்முறை பல சுற்றுகளின் மூலம் நடத்தப்படும்.

2025 தரவரிசை பெற்றவா்கள் மற்றும் மெயின்ஸ் 2025 விண்ணப்பதாரா்கள் இருவரும் இதில் பங்கேற்க தகுதியுடையவா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவிப்பு

கோவை மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்கள்

பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது: நகை, பணம் பறிமுதல்

கோவையில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், பேரூா் காவல் ந... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க

பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்

பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.ந... மேலும் பார்க்க