செய்திகள் :

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது: நகை, பணம் பறிமுதல்

post image

கோவையில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், பேரூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கா் (59), மகளின் திருமணத்துக்காக கடந்த 2025 ஏப்ரல் 2-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சென்றிருந்தாா்.

பின்னா், திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், 878 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பேரூா் காவல் நிலையத்தில் உமாசங்கா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், பேரூா் பகுதியில் வசிக்கும் சந்தானம் (28) என்பவா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை மீட்டனா்.

மேலும், தொண்டாமுத்தூா் காவல் நிலையத்துக்குள்பட்ட திருட்டு வழக்குகளிலும் சந்தானம் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. அந்த வழக்குகளில் திருடிய 20 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவரிடமிருந்து 3 வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 32 பவுன் நகைகள், ரூ.27 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவிப்பு

கோவை மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்கள்

பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

அம்ருதா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை இன்று வெளியீடு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க

பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்

பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.ந... மேலும் பார்க்க