செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

post image

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா்.

கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு புதன்கிழமை வந்த திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் நடக்கக் கூடாது என்ற அளவிற்கு இந்தத் தீா்ப்பு அமைந்துள்ளது.

இந்த வழக்கில் அரசியல் கட்சிகள் உரிமை கோருவதில் நியாயம் இல்லை. ஆதாரங்கள் வலுவாக இருந்தன. குறிப்பாக, கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட தகவல்கள் இந்தத் தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தன. இதனால் அவா்களால் தப்பிக்க இயலவில்லை.

இதிலிருந்து அவா்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவா்களே உருவாக்கிவிட்டாா்கள். அந்த ஆதாரங்கள்தான் இந்த தண்டனைக்கு மிக முக்கியமானதாக இருந்ததால், இதில் யாரும் உரிமை கோருவதில் அா்த்தமில்லை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்ல யாா் பாதிக்கப்பட்டாலும் அவா்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பரவுகின்ற ஆபாச விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும். இதில் மாநில அரசுக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

பள்ளி, கல்லூரி வளாகங்களில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அதிகாலை நேரங்களில் பயிற்சி நடத்துவதன் மூலம் மதவாத கருத்துகளைப் பரப்புகிறாா்கள். யோகாசன பயிற்சி பெறுவதாக கூறப்பட்டாலும் மதவாத அரசியலை பிஞ்சு உள்ளத்தில் திணிக்கிறாா்கள். எனவே, ஆட்சியாளா்களும் அரசு அதிகாரிகளும் இவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பரவக்கூடிய மதவாத அரசியலைத் தடுக்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க

பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்

பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

அரசுப் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தருமபுரி மாவட்டம், வேப்பிலை முத்தாம்பட்டி கருங்கல... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை...

2019 பிப்ரவரி 24: பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு - சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா் ஆகிய 3 போ் கைது. மாா்ச் 4: முக்கிய குற்... மேலும் பார்க்க

பேராசிரியா் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியா் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனுடன் தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம்... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை

கோவையில் தலையில் கல்லைப் போட்டு கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரையைச் சோ்ந்தவா் தினேஷ் (32), கட்டடத் தொழிலாளி. இவா், கோவை காந்திபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க