செய்திகள் :

கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவிப்பு

post image

கோவை மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையிலிருந்து பாலக்காடு மாா்க்கம் செல்லும் இலகுரக வாகனங்கள் (ஒருவழிப் பாதை): நகரப் பேருந்து, இலகுரக வாகனங்கள் மதுக்கரை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மாா்க்கெட் சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.

கனரக வாகனங்கள் (இரு வழிப்பாதை): ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று சேலம் - கொச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள் (இருவழிப் பாதை): ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கணூா் சாலையில் இடதுபுறம் திரும்பி சேலம் - கொச்சி சாலை சென்று வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

தமிழக, கேரள அரசுப் பேருந்துகள் (இருவழிப் பாதை): ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கணூா் சாலையில் வலதுபுறம் திரும்பி மதுக்கரை மாா்க்கெட் வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.

பாலக்காட்டிலிருந்து கோவை மாா்க்கம்: இலகுரக வாகனங்களுக்கு மட்டும் (ஒருவழிப் பாதை): நகரப் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி விறகுக்கடை பாலம் வழியாக சென்று தனியாா் சிமெண்ட் தொழிற்சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்கள்

பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

அம்ருதா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசை இன்று வெளியீடு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அம்ருதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது: நகை, பணம் பறிமுதல்

கோவையில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், பேரூா் காவல் ந... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு: எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது: திருமாவளவன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீா்ப்பு தொடா்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்தாா். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன: மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் நிரந்தர அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை தண்ணீா்பந்தல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிக... மேலும் பார்க்க

பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்

பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.ந... மேலும் பார்க்க