செய்திகள் :

`கணவரின் திருமணம் மீறிய உறவு; மனைவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றமாக கருத முடியாது’- டெல்லி நீதிமன்றம்

post image

கடந்த ஆண்டு டெல்லியில் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் குடும்பத்தினர் கொடுத்த புகாரில், 'எங்கள் பெண்ணின் கணவருக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் திருமணத்துக்கு மீறிய உறவு உள்ளது. எங்கள் மகள் அதை எதிர்த்து கேடத்தால் அடித்து உதைத்திருக்கிறார். தான் வாங்கிய வாகனத்துக்கு தவணை காட்டும்படியும் சித்திரவதை செய்திருக்கிறார். இதனால் அவள் தற்கொலை செய்தாள்" என்று புகார் தெரிவித்தனர்.

தற்கொலை

இதைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தார்கள். நீண்டநாள சிறையல் இருக்கும் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்

அவரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா, ஜாமீன் அனுமதித்ததோடு தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்ட நபர் தன் மனைவியை தொடர்ந்து அடித்து உதைத்ததாகவும், அவர் வாங்கிய வாகனத்துக்கு தவணை கட்டச் சொல்லி மனைவியின் குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப்பெண் உயிருடன் இருக்கும்போதே இந்த குற்றசசாட்டை எழுப்பி புகார் அளித்திருக்கலாமே. அதனால் அந்தக குற்றச்சாட்டுகள் மீது நம்பகத்தன்மை இல்லை.

டெல்லி உயர் நீதிமன்றம்

தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது!

திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக குற்றம்சாட்டி சில வீடியோக்களை ஆதராமாக அளிக்கப்பட்டுள்ளது. அப்படி அதுபோன்ற திருமணம் மீறிய உறவு இருந்ததாக கருதினாலும், அந்த உறவை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவுகளின்படி தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது.

கணவரின் திருமணம் கடந்த உறவு மனைவியின் தற்கொலைக்கு தூண்டியதாகாது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த ஆண்டு மார்ச் முதல் சிறையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது தேவையில்லாதது. அது மட்டுமின்றி குற்றப்பத்திரிகையை பார்த்தால் வழக்கு விசாரணை விரைவில் முடிவடையும்போல் தெரியவில்லை. இவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். அதனால் 50 ஆயிரம் ரூபாய் சொந்த ஜாமீனிலும், இரண்டு நபர்களின் உத்தரவாத்துடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறேன்" என்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்துள்ள கருத்துகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மா.சு மீதான வழக்கு: `விசாரணைக்கு ஒப்புதலை யாரிடம் பெறவேண்டும்?' - உச்ச நீதிமன்றத்தில் எழுந்த கேள்வி

மா. சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது செய்ததாகச் சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அவரை விசாரிப்பதற்கான ஒப்புதலை அரசிடம் பெற வேண்டுமா? அல்லது சபாநாயகர் இடம் பெற வேண்டுமா? என்ற முக்கிய கேள்வியை உச்ச நீ... மேலும் பார்க்க

DD Next Level: சர்ச்சையான கோவிந்தா பாடல்; கண்டித்த உயர்நீதிமன்றம் - தயாரிப்பு நிறுவனம் சொன்னதென்ன?

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)' திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவ்வாறிருக்க, இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா... கோவிந்தா...... மேலும் பார்க்க

BR Gavai: 40 ஆண்டுகால சட்டப் பணி.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பௌத்தர்!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்றோடு (மே 13) முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு! | Live

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்... மேலும் பார்க்க

ANI:``இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" - விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை 'அரசின் ஒரு பிரசாரகர்' என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது.இதற்கு ANI நிறுவனம்... மேலும் பார்க்க