செய்திகள் :

நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?

post image

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில் நேரில் கலந்துகொள்வாரா அல்லது தனது சார்பாக யாரேனும் அனுப்புவாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விஷயத்தில் தனது முடிவை அவர் சரியான நேரத்தில் அனைவருக்கும் தெரிவிப்பார் என மாநில மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக்கின் கடைசி கூட்டத்தில் மமதா பானர்ஜி தனது உரையின்போது மைக் அணைக்கப்பட்டதாகவும், அதனால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசமுடியாமல் போனதாகவும் குற்றம் சாட்டி கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்ததால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்த விஷயத்தில் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தனக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், தனக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் தனக்கு முன் பேசிய பிரதிநிதிகளுக்கு 10 முதல் 20 நிமிடங்கள் வரை உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இருப்பினும், பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பக்கத்தில் அவரது குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நிராகரித்தது. அதேசமம் பிஐபியின் அறிக்கையில், அந்தக் கூட்டத்தில் மமதா பானர்ஜியின் பேச்சு நேரம் முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை விமான நிலையம், தாஜ் ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஹோட்டலுக்கு மிரட்டல் விட... மேலும் பார்க்க

தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!

தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின... மேலும் பார்க்க

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் சனிக்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் 'சஞ்சீவனி' எனும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இயக்கப்பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு அமைக்கப்படவுள்ளது.உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் அம்மாநிலத்திலுள்ள சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் காடுகளை சுற்றி வளைத்து பயங்கரவாத தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரில் காடுகளைச் சுற்றி வளைத்து 3 பயங்கரவாத சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு மூன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத் தம்பதி கைது!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய வங்கதேசத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். துர்க் மாவட்டத்தின் சிறப்பு அதிரடி படை காவல் துறையினர், அங்கு சட்டவிரோதமாக குடியேறி வசித்த... மேலும் பார்க்க