செய்திகள் :

``எங்க அப்பா கட்டுமான வேலைக்காக தமிழ்நாடு வந்தாங்க..'' - தமிழில் 93% மதிப்பெண் எடுத்த பீகார் மாணவி

post image

சென்னையில் உள்ள கவுல் பஜார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பீகாரைச் சேர்ந்த மாணவி ஜியா குமாரி படித்து வருகிறார்.

இவர் தற்போது நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 467 மதிப்பெண்ணும் தமிழில் 93 மதிப்பெண்ணும் எடுத்து அசத்தி இருக்கிறார்.

ஜியா குமாரி பீஹார் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான கூலித்தொழிலாளியின் மகள்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

இவர் அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரிகள் உடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

500-க்கு 467 மதிப்பெண்ணும் தமிழில் 93 மதிப்பெண்ணும் எடுத்தும் அசத்திய ஜியா குமாரியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய ஜியோ குமாரி, “ எனது தந்தை 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான வேலைக்காக சென்னைக்கு குடிபெயர்ந்தார். தமிழகத்தில் அரசு பள்ளிகள் நன்றாக இருப்பதை கேள்விப்பட்டு நானும் எனது இரண்டு சகோதரிகளும் சென்னைக்கு வந்தோம்.

எனது தந்தை கூலி வேலை செய்கிறார். அவரால் தனியார் பள்ளியில் பணம் செலுத்தி படிக்க வைக்க முடியாது.

தமிழ் நிச்சயமாக ஹிந்தியை விடக் கடினமாக இருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதும், அது எளிதாகிவிடும்.

இங்குள்ள அனைவரும் தமிழில் மட்டுமே என்னிடம் பேசினார்கள். நானும் அவர்களுடன் பேசி தமிழை கற்றுக்கொண்டேன்.

பீகார் மாணவி ஜியா குமாரி

வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ் தான் எளிதான பாடமாக இருந்தது.

நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் பேசியும், எழுதியும் வருகிறேன்.

11,12ம் வகுப்புகளில் தொடர்ந்து தமிழ் படிப்பேன். நான் டாக்டர் ஆக விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.

``தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்” - மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற தூத்துக்குடி மாணவி ரேஷ்மா

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியானது. அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 96.76 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம், 3-வது இடத்தையும், அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் த... மேலும் பார்க்க

மதுரை மத்தியச் சிறை: பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி; சிறைத்துறையினர் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மதுரை மத்திய சிறைவாசிகள் அனைவரும் 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் அதிகம... மேலும் பார்க்க

SSLC Exam: `` சிவகங்கை முதலிடம்; வெற்றிக்கு காரணம்..'' - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி

பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.அதுமட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் 97.49 சதவிகிதம் தேர்ச்சி வி... மேலும் பார்க்க

10th Result: இணை பிரியாத இரட்டை சகோதரிகள்; இருவருக்கும் 474 மதிப்பெண்கள்.. அசத்தல் ஒற்றுமை..!

கோவையில், திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சுந்தரராஜன் – செல்வி தம்பதியினர் உள்ளனர். இவர்களின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிஹா ஆகிய இருவரும் ராமநாதபுரம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்புபடி... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்கள்..

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 மு... மேலும் பார்க்க

+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு முடிவில் மா... மேலும் பார்க்க