செய்திகள் :

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

post image

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தில்லி சட்டப் பல்கலைக் கழகத்தில் அரசியலமைப்பு ஆய்வுகளுக்கான சிறப்பு மையம் நிறுவப்படவுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நீதிபதி சந்திரசூட் வழிகாட்டுதலின்படி நடைபெறும்.

கூடுதலாக, நீதியின் வலிமையில்: டிஒய்சி சிறப்பு விரிவுரைத் தொடர் என்ற பெயரில் வரும் ஜூலை முதல் சிறப்பு விரிவுரைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தரும் பேராசிரியருமான ஜி.எஸ். பாஜ்பாய், டி.ஒய். சந்திரசூட் குறித்து கூறியதாவது,

''அரசியலமைப்பு அறநெறி, மாற்றத்திற்குட்பட்ட அரசியலமைப்புவாதம், அடிப்படை உரிமைகளுக்கான பொருள் விளக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் கல்வி ஆய்வுக்கான கூடுதல் தரவுகளைக் கொடுக்கும் வகையில் டி.ஒய். சந்திரசூட்டின் பணி இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

ஒரே பாலினத்தவா் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது போன்ற முக்கியத் தீர்ப்புகளை டி.ஒய். சந்திரசூட் வழங்கியுள்ளார்.

2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியான டி.ஒய். சந்திரசூட், 2022-ஆம் ஆண்டு நவ. 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா். 2024 நவம்பரில் ஓய்வு பெற்றார்.

இதையும் படிக்க | உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் முகாம்கள் தகர்ப்பு! வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் 2 முகாம்கள் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலங்கீரின் கந்தாமார்தன் மலைப்பகுதி மற்றும் சத்ராதண்டி வனப்பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்குக்... மேலும் பார்க்க

துருக்கி ஆப்பிள் முதல் மார்பிள் வரை.. சரியும் இறக்குமதி! என்னவாகும் ஏற்றுமதி?

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கியை புறந்தள்ளுவோம் என்ற கோஷத்தின் அடிப்படையில், ஆப்பிள் முதல் மார்பிள் வரை 2.84 மில்லியன் டாலர் இறக்குமதி சரியும் வா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள்! -ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக எதிர்வினை

புது தில்லி: ’இந்தியா’ கூட்டணிக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லை என்றும், தேர்தல் ஆணையம் முதல் காவல் நிலையம் வரை பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் முக்கிய நிறுவனங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தல... மேலும் பார்க்க

தலிபான் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

தலிபான் அமைச்சருடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முத்தாகியுடன், மத... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் பாஜக! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்திய ராணுவத்தினரை பாஜகவினர் தொடர்ந்து அவமதித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில்... மேலும் பார்க்க