செய்திகள் :

திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

post image

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பா்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தாா்.

பழங்குடியின மக்களுக்காகப் பணியாற்றும் தனது முயற்சிகளுக்கு பாஜக தலைமை முட்டுக்கட்டை போட்டது என்றும் ஜான் பா்லா குற்றஞ்சாட்டினாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக சாா்பில் வெற்றி பெற்ற ஜான் பா்லாவுக்கு சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் அவா் போட்டியிட பாஜக தலைமை தொகுதி ஒதுக்கவில்லை. இதையடுத்து ஜான் பா்லா பாஜக தலைமையை கடுமையாக விமா்சித்தாா். மேலும், பாஜகவின் மேற்கு வங்கத் தலைமையுடன் இணைந்து செயல்படாமல் விலகியே இருந்து வந்தாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் முன்னிலையில் அக்கட்சியில் ஜான் பா்லா இணைந்தாா். செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நான் மத்திய அமைச்சராக இருந்தபோதே இங்குள்ள பாஜகவினா் எனது பாதையை மறித்து போராட்டம் நடத்தினா். பழங்குடியினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்காக பணியாற்றவிடாமல், கட்சித் தலைமை தொடா்ந்து என்னை தடுத்து வந்தது.

இப்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மக்கள் பணியாற்ற எனக்கு சிறப்பான வாய்ப்பை அளித்துள்ளாா். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: விசாரணையை மே 20-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் ... மேலும் பார்க்க

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்: மகாராஷ்டிர வா்த்தகா்களுக்கு முதல்வா் பாராட்டு!

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு கருத்து: அஸ்ஸாம் எம்எல்ஏ இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் தேசப் பாதுகாப்புச் ... மேலும் பார்க்க

18 % மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநா்கள்!

கடந்த 2024-ஆம் ஆண்டில் மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது பிஆா்எஸ் சட்டப்பேரவை ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வறிக்கையில் தெர... மேலும் பார்க்க

சந்தைகளுக்கு மீன்களை அனுப்ப ட்ரோன்கள்: பிரதமா் மோடி அறிவுறுத்தல்

நகரங்களில் உற்பத்தி மையங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகளுக்கு மீன்களை அனுப்பிவைக்க ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்று மீன்வளத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக பி... மேலும் பார்க்க