செய்திகள் :

RCBvsKKR : '8:45 மணி வரை கெடு; மழை தொடர்ந்தால் ஓவர் எப்படி குறையும்?

post image

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையின் காரணமாக போட்டியின் டாஸ் தாமதமாகியிருக்கிறது. ஒருவேளை, மழை விடாது பெய்யும்பட்சத்தில் என்ன நடக்கும்? ஓவர்களை எப்படி குறைப்பார்கள்?

RCB
RCB

'ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு!'

இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் பெங்களூரு அணி முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும். கொல்கத்தா வெல்லும்பட்சத்தில் இன்னும் அந்த ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும். ஒருவேளை மழை முழுவதுமாக பெய்து போட்டி கைவிடப்படும்பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். அப்போது கொல்கத்தா அணி தனது ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழக்கும்.

மழையினால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படும்பட்சத்தில், எப்படி குறைக்கப்படும்? அதற்கான விதிகள் என்ன?

வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகளில் 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். மழையினால் போட்டி பாதிக்கப்பட்டு 7 மணிக்கு டாஸ் போட முடியவில்லையெனில், 7:15 க்குள்ளாவது டாஸ் போடப்பட வேண்டும். அப்படியெனில்தான் 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். தாமதமானால் திட்டமிட்டப்படி போட்டி தொடங்காது. கொஞ்சம் தாமதமாகும்.

RCB vs KKR
RCB vs KKR

8:45 மணி வரைக்கும் ஓவர்களை குறைக்கமாட்டார்கள். மழையினால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும், மழையினால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு இன்னிங்ஸ் பிரேக் 20 நிமிடத்திலிருந்து 10 நிமிடமாகக் குறைக்கப்படும். 8:45 க்குள் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டுவிட்டால் முழுமையாக 20 ஓவர் போட்டி நடைபெற்றுவிடும்.

8:45 மணிக்கு மேலும் மழை விடவில்லை அல்லது பிட்ச் தயாராகவில்லையெனில், 8:45 மணிக்கு மேலாக ஒவ்வொரு 4 நிமிடங்கள் 25 நொடிகளுக்கும் ஒவ்வொரு ஓவராகக் குறைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

அதாவது, 8:49 க்கு ஆட்டம் தொடங்கினால் 19 ஓவர் ஆட்டமாக நடைபெறும். 8:53 க்கு தொடங்கினால் 18 ஓவர் ஆட்டமாக நடைபெறும்.

KKR
KKR

இந்த அடிப்படையில் கடைசி கட் ஆப் டைம் 10:56 ஆகும். இரவு 10:56 மணிக்குள் டாஸ் போடப்பட்டு போட்டிக்குத் தயாராகிவிட்டால் 5 ஓவர் போட்டியை நடத்தி முடித்துவிடுவார்கள். ஐ.பி.எல்-இல் ஒரு போட்டியில் முடிவை எட்ட குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்த வேண்டும்.

பெங்களூருவில் மைதானத்தில் மழை நீரை வெளியேற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், மழை நின்றால் 45 நிமிடத்தில் போட்டியை நடத்திவிடலாம் என்கிறார்கள்.

``தோனி டெஸ்ட்ல ரிட்டையர் ஆகிட்டு இன்னும் ஐ.பி.எல் ஆடுறாரு, ஆனா கோலி..'' - சஞ்சய் மஞ்சரேக்கர்!

'கோலி பற்றி சஞ்சய் மஞ்சரேக்கர்!'பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வி... மேலும் பார்க்க

``விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவன்!'' - சின்னசாமியில் நெகிழ்ந்த ஹர்ஷா போக்லே!

பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி ஆடப்போகும் முதல் போட்ட... மேலும் பார்க்க

Rohit: "வான்கடே இப்போது மேலும் ஐகான் ஆகிவிட்டது' - ரோஹித்துக்கு சூர்யகுமார் யாதவ் புகழாரம்

மும்பை கிரிக்கெட் சங்கமானது (MCA), இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று ஸ்டேண்ட் திறந்துவைத்து அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இ... மேலும் பார்க்க

ஏலத்தில் எடுப்பதாகக் கூறி எடுக்காத RCB; அதே அணிக்கு கேப்டன்; கோலியின் ஆதரவு - பட்டிதார் ஷேரிங்ஸ்

நடப்பு ஐ.பி.எல் சீசனில், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ள அணியாக ஆர்.சி.பி இருக்கிறது. 11 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.கேப்டனாக ரஜத்... மேலும் பார்க்க

Rohit Sharma: "இதை நான் கனவில் நினைத்ததில்லை" - வான்கடேவில் கௌரவித்த MCA; நெகிழ்ந்த ரோஹித்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர... மேலும் பார்க்க

Ashwin: 'சுப்மன் இல்ல... இவர இந்திய அணிக்கு கேப்டனா போடுங்க...'- அஷ்வின் ஓப்பன் டாக்

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை அணியி... மேலும் பார்க்க