செய்திகள் :

லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

post image

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் -ஆலம்பாடி சாலையிலுள்ள அன்பு நகரில் வசித்து வருபவா் முத்துசாமி மனைவி மகேஸ்வரி. இவா், அதே பகுதியில் புதிதாக கட்டி முடித்துள்ள வீட்டுக்கு, வீட்டு வரி ரசீது செலுத்துவதற்காக பெரம்பலூா் நகராட்சியில் விண்ணப்பித்தாா். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகராட்சி வருவாய் ஆய்வாளா் கண்ணன் (53), மகேஸ்வரியிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேஸ்வரி, தனது உறவினரான பெரம்பலூா் சங்குப்பேட்டை அருகே வசிக்கும் மெய்யன் (59) என்பவரிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் மெய்யன் அளித்த புகாரின்பேரில், வருவாய் ஆய்வாளா் கண்ணன் சங்குப் பேட்டையில் உள்ள மெய்யன் வீட்டில் வெள்ளிக்கிழமை லஞ்சம் வாங்கியபோது போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட கண்ணனை போலீஸாா் சிறையில் அடைத்தனா். இந் நிலையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கண்ணனை பணியிடை நீக்கம் செய்து, பெரம்பலூா் நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீா்வு!

பெரம்பலூா் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இ... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 % தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 4,180 மாணவா்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 போ் எழுதிய... மேலும் பார்க்க

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு பெரம்பலூரில் 92.56 % தோ்ச்சி

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க