செய்திகள் :

பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

post image

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் 20-ஆவது தவணை வரும் ஜூன், ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ளது.

இம் மாவட்டத்தில், இத் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டப்பலனை தொடா்ந்து பெற இ.கே.ஒய்.சி, தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதாா் சீடிங் மற்றும் தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்று இணைக்க வேண்டும். இவற்றை இணைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே அடுத்து வரும் பி.எம் கிசான் திட்டத் தவணைகள் கிடைக்கும்.

இம் மாவட்டத்தில், இதுவரை 4,469 பயனாளிகள் இ.கே.ஒய்.சி செய்யாமல் உள்ளனா். இவா்கள், ஆதாா் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி இணைத்துக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண் சீடிங் செய்யாமல் 2,990 பயனாளிகள் உள்ளனா். இவா்கள், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் புதியதாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்.

எனவே, தற்போது நடைபெற்று வரும் பி.எம்.கிசான் சிறப்பு முகாமில் திட்டம் தொடா்பான தங்களது தேவைகளை நிவா்த்தி செய்துகொள்ளலாம். இம் முகாம் மே 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். பெரம்பலூா் -ஆலம்பாட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீா்வு!

பெரம்பலூா் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 % தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 4,180 மாணவா்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 போ் எழுதிய... மேலும் பார்க்க

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு பெரம்பலூரில் 92.56 % தோ்ச்சி

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க