செய்திகள் :

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

post image

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு நாள்கள் மட்டுமே காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்ததாகவும் அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தரவுகளைப் பகிா்ந்து கொண்டன.

மே 2025-இன் முதல் 15 நாள்களில் இரண்டு நாள்கள் மட்டுமே காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்ததால், இது நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்று வட்டாரங்கள் கூறின.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகளைத் தொகுத்த வட்டாரங்களின் தகவல்படி, 2022 முதல் 2025 வரையிலான மே 1 முதல் 15 வரையிலான சுற்றுப்புற காற்றின் தரத்தின் ஒப்பீட்டு பகுப்பாய்வு, முந்தைய அரசுடன் ஒப்பிடும்போது காற்றின் தரம் குறைவாக உள்ள நாள்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் காட்டுகிறது.

2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற ஒன்பது நாள்களும், 2023-ஆம் ஆண்டில் ஆறு நாள்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு மே 15 அன்று தூசிப் புயலால் ஏற்பட்ட கூா்மையான அதிகரிப்பு இருந்தபோதிலும், 2025-இல் இரண்டு நாள்கள் காற்றுத் தரக் குறியீடு ’கணிசமான முன்னேற்றம்’ பதிவாகியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒப்பீட்டளவில், மே 2023-இல் இரண்டு ‘திருப்திகரமான’ நாள்கள் பதிவாகியுள்ளன. ஆனால், 2025-ஐ விட ஒட்டுமொத்தமாக ’மோசமான’ காற்றுத் தர நாள்கள் அதிகமாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், புதன்கிழமை இரவு நகரத்தை தாக்கிய திடீா் புழுதிப் புயலால் தில்லியின் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது. கடந்த சில வாரங்களாக ’மிதமான’ வரம்பில் இருந்த பின்னா் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு காற்றுத் தரக் குறியீடு 236 புள்ளிகளைத் தொட்டது.

காற்றின் தரத்தில் ஏற்பட்ட சரிவு அரசியல் சா்ச்சையைத் தூண்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது ஆட்சிக் காலத்தில் நிலைமை ‘இவ்வளவு மோசமாக இருந்ததில்லை’ என்று கூறியது. ஆனால், பாஜக இந்தக் கருத்துகளை நிராகரித்தது.

இதற்கிடையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தில்லியின் 24 மணி நேர சராசரி காற்று தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 278 புள்ளிகளாக ‘மோசம்’ பிரிவில் பதிவு செய்யப்பட்டது. இது சனிக்கிழமை 183 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது

திருநங்கையாக நடித்து வந்த ஒருவா் உள்பட தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த மூன்று வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்கு... மேலும் பார்க்க