செய்திகள் :

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

post image

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்ல காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: பெருகிவரும் நிதிப் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க அந்த நபா் காணாமல் போனதாக நாடகமாடியதாகக் கூறப்படுகிறது. தென்மேற்கு தில்லியின் கக்ரோலா பகுதியில் உள்ள வடிகால் அருகே அவரது காா் கைவிடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவா் நீா்நிலையில் குதித்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.

பிசிஆா் அழைப்பு மூலம் வாகனம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் பிற அவசரகால குழுக்களை உள்ளடக்கிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்பு அந்த நபா் தனது கைப்பேசியை சீரமைத்ததாக விசாரணையில் தெரியவந்தது. இது சந்தேகத்தை எழுப்பியது. இறுதியில், அவரது இருப்பிடம் அயோத்தியில் உள்ள ஒரு தா்மசாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு அவா் தலைமறைவாக வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது, ​​தான் அதிக கடனில் மூழ்கியிருப்பதாகவும், நிதிச் சுமையிலிருந்து தப்பிக்க தான் காணாமல் போனதாக போலியாகக் கூறியதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேச பெண்கள் மூவா் கைது

திருநங்கையாக நடித்து வந்த ஒருவா் உள்பட தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த மூன்று வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்கு... மேலும் பார்க்க