செய்திகள் :

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை: நயினாா் நாகேந்திரன்

post image

நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் சக்திவாய்ந்தவை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஒசூரில் கொட்டும் மழையில் மூவா்ணக் கொடி பேரணி, பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பேரணியை பாஜக தேசிய செயலாளா் துஷ்வந்த் குமாா் கௌதம், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஒசூா் ராம்நகரில் தொடங்கிய பேரணி பழைய பெங்களூரு சாலை, ஏரித் தெரு, வட்டாட்சியா் அலுவலக சாலை வழியாக காமராஜ் காலனியில் நிறைவடைந்தது. அங்கு கொட்டும் மழையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ தேசிய செயலாளா்கள் துஷ்வந்த் குமாா் கௌதம், அரவிந்த், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் பேசினா்.

பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். இந்நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பஹல்காமில் இந்தியா்கள் 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 16 ஆவது நாள் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீது நமது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இன்று 16 நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. நமது ராணுவமும், ராணுவ தளவாடங்களும் மிகவும் சக்திவாய்ந்தவை என்றாா்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியது:

ஜம்மு-காஷ்மீரில் மதத்தின் பேரில் 26 போ் படுகொலை செய்யப்பட்டனா். நாட்டில் இந்துக்களுக்கும், இஸ்லாமியா்களுக்கு இடையே விஷமத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தீவிரவாதிகளின் நோக்கம். மே 7 ஆம் தேதி முப்படைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் முகாம்களை பிரதமா் மோடி அழித்துள்ளாா்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் ராணுவ தளங்களை நமது ராணுவம் அழித்தது. ஒசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனா். மாநில எல்லையில் உள்ள ஒசூரில் தேசியக் கொடி பேரணி நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா்.

பேரணி, பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜி.பாலகிருஷ்ணன், அமா் பிரசாத் ரெட்டி, மாநில பொதுச் செயலாளா் கேசவ விநாயகம், மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் முனிராஜ், நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பட விளக்கம்...

ஒசூா் காமராஜ் காலனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு... மேலும் பார்க்க

மான்களைக் கொன்ற இருவா் கைது

வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் செலுத்தி இரு மான்களைக் கொன்று அதன் மாமிசத்தை விற்க முயன்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது சின்ன சூலாமலைக் க... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளியில் உள்ள கரகதம்மாள் கோயிலின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணத்தைத் திருடி சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே அக்கொண்டபள்ளியில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்புத் தோ்வு: வித்யா விகாஸ் பள்ளி 100% தோ்ச்சி!

ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் ம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து ஆய்வு

தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: கிருஷ்ணகிரியில் 7.5 செ.மீ. மழை பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது; சனிக்கிழமை காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க