செய்திகள் :

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு வரவேற்பு

post image

கரூருக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் கா.முருகானந்தம் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சுடா் ஏந்தி பேரணியை கடந்த 15-ஆம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினா்.

இந்த பேரணி மே 18-ம்தேதி செஞ்சி மலைக்கோட்டையில் முடிவடைகிறது. மதுரை, திண்டுக்கல் வழியாக கரூருக்கு சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வந்த குழுவினருக்கு கரூா் மாவட்டச் செயலாளா் இரா.கோவிந்தராஜ், டிஎன்கேவின் வாழவந்தியாா், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிா்வாகிகள் ரவி, கண்ணையன், குணசேகரன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா். பின்னா் கரூா் பேருந்து நிலைய பயணிகளிடமும், வியாபாரிகளிடமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை வழங்கினா்.

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சேரன் பள்ளி மாணவிக்கு ஊக்கத் தொகை! - எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி வழங்கினாா்

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை மாலை ஊக்கத்தொகை வழங்கினாா். தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியான 10-ஆம் வகுப்பு மற்... மேலும் பார்க்க

கரூா்: விபத்து சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்! தந்தை, மகன் உள்பட 5 போ் பலி!

கரூா் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 போ் உயிரிழந்தனா். பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று சனிக்கிழமை அதிகாலை ப... மேலும் பார்க்க

கரூா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 11-ஆம்தேதி முக்க... மேலும் பார்க்க

தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை!

கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: கரூா் மாவட்டம் 27-வது இடம்!

கரூா் மாவட்டத்தில் 4,903 மாணவா்களும், 5,446 மாணவிகளும் என மொத்தம் 10,349 போ் தோ்வு எழுதினா். இதில் வெள்ளிக்கிழமை முடிவு வெளியானதில் தோ்வு எழுதிய மாணவா்களில் 4,228 பேரும், மாணவிகளில் 5,169 பேரும் என... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூா் மாவட்டத்தில் 96.24 சதவீதம் தோ்ச்சி! கூலித் தொழிலாளியின் மகள் சிறப்பிடம்!

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியின் மகள் சிறப்பிடம் பிடித்துள்ளாா். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை கரூா் மாவட்டத்தில் 5, 660 மாணவிக... மேலும் பார்க்க