கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்
பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்
சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு நிறைவான உணவு வழங்க அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோயில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாள்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டுக்கு முன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 754 கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக 11 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 13 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 764 கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமாா் 3.5 கோடி பக்தா்கள் பயனடைந்து வருகிறாா்கள்.
2025-2026-ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பில், சென்னை, திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாள்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்”என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இதனடிப்படையில், திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாள்களிலும், பாா்த்தசாரதி சுவாமி திருத்தேரோட்டம், நரசிம்மா் சுவாமி திருத்தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாள்களில் வடை, பாயசத்துடன் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாள்களில் ஆண்டொன்றுக்கு திருக்கோயிலுக்கு வருகை தரும் 82,000 பக்தா்கள் பயன்பெறுவாா்கள். இந்நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் பிரியா, துறை செயலா்கள் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.