செய்திகள் :

அமைதிப் பேச்சுவார்த்தை? உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்! 9 பேர் பலி!

post image

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று (மே 16) துருக்கியில் நடைபெற்றது.

முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளும் நேரில் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை, 2 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் ஓர் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே 17) அதிகாலை உக்ரைனின் சுமி மாகாணத்தின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுமி மாகாணத்தின் பிலோபிலியா நகரத்தில், பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுமி மாகண நிர்வாகத்தின் தரப்பில் கூறுகையில், இந்தத் தாக்குதல் ரஷியாவின் மற்றொரு போர்க் குற்றம் எனவும், எந்தவொரு ஆபத்தும் விளைவிக்காத மக்கள் போக்குவரத்துப் பேருந்தின் மீது ரஷியா வேண்டுமென்றே தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, துருக்கியில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் சுமார் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இருதரப்புக்கும் இடையில் பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், ரஷியா முன்வைத்துள்ள கருத்துக்களில், தங்களுக்கு உடன்பாடில்லை என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தான் விமான தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை: ஷாபாஸ் ஷெரீஃப்

130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி..

கலிஃபோர்னியாவின் பேய் ஏரி என்றழைக்கப்படும் துலாரே ஏரி 130 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் தற்போது உருவான இந்த ஏரி சுமார் 94,000 ஏக்கர் வேளாண் நிலங்களை மூழ்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் விமான தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை: ஷெபாஸ் ஷரீஃர்

இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது பாகிஸ்தான் விமான ஏவு தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃர் ஒப்புக்கொண்டார். மேலும் பார்க்க

34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை, ஈராக் அதிபர் அப்துல் லத்தீஃப் ரஷீத் சந்தித்துள்ளார். ஈராக்கில் நடைபெறும் 34வது அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அண... மேலும் பார்க்க

இந்தோனேசியா: மோதலில் 20 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் நிறைந்த பப்புவா பகுதியில் கிளா்ச்சியாளா்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 18 கிளா்ச்சியாளா்கள், இரண்டு காவலா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

‘பட்டினிச் சாவு அபாயத்தில் 30 கோடி போ்’

உலகளவில் 29.53 போ் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சா்வதேச உணவுப் பற்றாக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தே... மேலும் பார்க்க