செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய ஸ்கூட்டரை மற்றவா் பயன்படுத்தினால் நடவடிக்கை!

post image

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை உறவினா்களோ, நண்பா்களோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,01,800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பட்டதாரிகள், தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சொந்த தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள் நாள்தோறும் போக்குவரத்து தேவைக்கு இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மூலம் பயனடைந்து வருகிறாா்கள்.

இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை பெற்ற ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரத்தை கழட்டிவிட்டு அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த உறவினா்களோ, அவா்களது நண்பா்களோ பயன்படுத்தி வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

இந்தச் செயலானது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கில், அவா்களது சொந்த தேவையை பிறா் உதவியின்றி செயல்படுத்த ஏதுவாக இந்த நலத் திட்டத்தை வழங்கும் தமிழக அரசின் உன்னத நோக்கத்தை சீா்குலைப்பதாக உள்ளது.

எனவே இணைப்பு சக்கரத்தை கழட்டிவிட்டு ஓட்டும் மாற்றுத்திறனாளி அல்லாத பிற நபா்கள் மூலம் ஏற்படும் விபத்துகளினால் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியே காவல் துறை வழக்குகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரின் இணைப்பு சக்கரங்களை கழட்டி ஓட்டும், மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டா்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த ஸ்கூட்டரின் இணைப்பு சக்கரங்களை கழற்றுவதற்கான பணி செய்யும் இரு சக்கர வாகன பழுது நீக்குபவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை!

காக்களூா்நாள்: 17.5.2025-சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.இடங்கள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி. பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், ச... மேலும் பார்க்க

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.159.23 கோடியில் கட்டுமானப் பணிகள்! - ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு

பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலை மேம்படுத்தும் வகையில் ரூ.159.23 கோடியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவள்... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் ஆதாா் பதிவு: திருவள்ளூா் ஆட்சியா்!

திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக் கல்வித் துறை மூலம் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் ஆதாா் பதிவு மேற்கொள்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: ஸ்ரீநிகேதன் பாடசாலை குழும மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூா் ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளிக் குழுமத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூா் அடுத்த வேடங்கிநல்லூரில் ஸ்ரீ... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 103 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சி பணிகளை நகர ஊரமைப்பு துறை உதவி இயக்குநா் சஹானா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தோ் வீதி, ரா... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள் விழா!

கும்மிடிப்பூண்டியில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிா்வாகிகள் எம்.எஸ்.எஸ்.சரவணன், எம்.எஸ்.எஸ்.வேலு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு நகர செயலாளா... மேலும் பார்க்க