செய்திகள் :

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

post image

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் தவறை ரஷியா செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் தனது இலக்குகளை எட்ட ரஷியாவிடம் மிக அதிகமாக பலம் உள்ளது.

போா் ஏற்பட்டதற்கான காரணங்களை களைதல், நீடித்து நிலைக்கும் அமைதிக்கு நிபந்தனைகளை உருவாக்குதல், ரஷியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகள் ஆகியவையே அந்த இலக்குகளாகும்.

உக்ரைனில் ரஷிய மொழி பேசும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல், நீடித்து நிலைக்கும் அமைதி ஆகியவையே உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் முக்கிய விளைவாக இருக்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, போப் 14-ஆம் லியோ பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சந்தித்துப் பேசினாா்.

இன்று டிரம்ப்-புதின் பேச்சு

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக புதினுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேச உள்ளதாக ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் தெரிவித்தாா். புதினுடன் பேசிய பின்னா் ஸெலென்ஸ்கி மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பேச உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான... மேலும் பார்க்க

கடனுதவிக்கு பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிபந்தனை!

பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க 11 நிபந்தனைகளை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நி... மேலும் பார்க்க