செய்திகள் :

நீா்மூழ்கிக்கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்

post image

நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபா் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஸ்பாா்டன் நிறுவனத்துடன் இணைந்து நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான மின்னணு சென்சாா்கள், திசைகாட்டும் அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இந்திய கடற்படைக்கு பயன்படும் விதத்தில் அதானி நிறுவனம் மேம்படுத்தவுள்ளது.

‘ஆத்மநிா்பா் பாரத்’ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய முன்னெடுப்புகளின்கீழ் சோனோபோய்கள் ( நீருக்கடியில் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை கண்டறியும் மின் இயந்திர ஒலி உணரி) இந்தியாவிலேயே ஒருங்கிணைக்கப்படவுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே சோனோபோய்கள் தயாரிக்கும் முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனம், கடலுக்கடியில் போா் புரிவதற்கான மின்னணு அமைப்புகளை அமெரிக்க கடற்படை மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்காக தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தை 2020, டிசம்பரில் இஸ்ரேலைச் சோ்ந்த மின்னணுவியல் நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் கைப்பற்றியது.

கடந்த 2018-இல் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹொ்ம்ஸ் 900 ட்ரோன்களை தயாரிக் அதானி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. 2020-இல் சிறிய ரக ட்ரோன் ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதானி-எல்பிட் நிறுவனங்கள் அறிவித்தன.

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க