செய்திகள் :

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!

post image

கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகான்டே. இவரது மனைவி ஜெயஸ்ரீ, இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவரது மனைவி ரேணுகா(34). இந்த தம்பதிக்கு திருமணமாகியும் வெகுநாள்களாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மே 17ல் கிராமத்தின் அருகே உள்ள சாலையில் ரேணுகா தலையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். தன்னுடன் மோட்டர் சைக்கிளில் வந்தபோது சக்கரத்தில் சேலை சிக்கியதால் இறந்துவிட்டதாக சந்தோஷ் அவரது தந்தை காமண்ணா ஆகியோர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று ரேணுகாவின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விபத்து நடந்திருப்பதற்கான எந்த ஆதாரங்களும் போலீஸாருக்கு கிடைக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ரேணுகாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதேநேரத்தில் கணவர் சந்தோஷ் அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இறுதியாக ரேணுவுக்குக் குழந்தை இல்லாததால் நானும் என் பெற்றோர்களும் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டுக் கொன்று, சேலையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூவம் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க

மோடியின் 151 வெளிநாட்டுப் பயணங்களால் என்ன பலன்? கார்கே

11 ஆண்டுகளில், 72 நாடுகள் மற்றும் 151 வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தற்போது தனிமைப்படுத்தப்பட்டதைபோன்று உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கர்நாடகத்தின் கடல் பகுதியில் மத்திய கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகக் கூடும் எனக் கூறப்பட... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க