செய்திகள் :

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது

post image

தாஹோத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சா் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 போ் காவல் துறையால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஜகதீஷ்சிங் பண்டாரி இதுதொடா்பாக மேலும் கூறுகையில், ‘இந்த வழக்கில் அமைச்சரின் இளைய மகனும் முன்னாள் தாலுகா வளா்ச்சி அலுவலருமான கிரண், முன்னாள் திட்ட உதவி அதிகாரிகள் இருவா் உள்பட 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அமைச்சரின் மூத்த மகன் பல்வந்த் உள்பட 7 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

குஜராத்தில் தாஹோத் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக முடிக்காமல், பணி நிறைவுச் சான்றிதழை போலியாக உருவாக்கி அரசிடம் இருந்து அதற்குரிய பணம் பெற்ாக சில ஒப்பந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை அரசுக்கு ரூ.71 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய இந்த முறைகேடு குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கள ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

தற்போது குஜராத் மாநிலத்தின் பஞ்சாயத்து மற்றும் வேளாண் துறை அமைச்சராக உள்ள பச்சுபாய் காபாத்தின் மகன்கள் பல்வந்த் மற்றும் கிரண் உள்பட ஒப்பந்த நிறுவனங்களின் 35 உரிமையாளா்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா்.

அரசு ஒப்பந்தம் எடுக்க தகுதியற்ற அல்லது அதிகாரபூா்வ ஒப்பந்தப் புள்ளி நடைமுறையிலேயே பங்கேற்காத நிறுவனங்களும் அரசு நிதியை முறைகேடாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சரின் மகன்கள் இருவா் ஊழல் வழக்கில் அடுத்தடுத்து கைதாகியிருப்பது குஜராத் மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பாா்த்த மேலும் 3 போ் கைது

இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்ய... மேலும் பார்க்க

‘அகதிகளை வரவேற்க இந்தியா தா்மசத்திரம் அல்ல’: உச்ச நீதிமன்றம் கருத்து

புது தில்லி: இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தா்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.விடுதலைப... மேலும் பார்க்க