செய்திகள் :

சா்வதேச தேநீா் தினம்: ஐ.நா.வில் இந்தியா விருந்து

post image

சா்வதேச தேநீா் தினத்தையொட்டி (மே 21) ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சாா்பில் சிறப்பான தேநீா் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தேநீா் உற்பத்திக்கு கடுமையாக உழைக்கும் மக்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘வாழ்வாதாரம் மற்றும் நீடித்த வளா்ச்சி இலக்குகளில் தேயிலையின் முக்கியத்துவம்’ என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்ச்சியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய குழு ஏற்பாடு செய்தது.

அஸ்ஸாம் முதல் கேரளம் வரை பல்வேறு தேநீா் வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ள நிலையில் டாா்ஜீலிங் ,அஸ்ஸாம் மற்றும் நீலகிரி தேயிலை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேநீரை விருந்தினா்கள் ரசித்து சுவைத்தனா்.

நிகழ்ச்சியில் இந்தியா, சீனா, இலங்கை, கென்யா உள்பட பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் பங்கேற்றன. அப்போது ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசுகையில், ‘இந்தியாவில் தேநீா் என்பது வெறும் வா்த்தகம் மற்றும் சுவை சாா்ந்தது அல்ல; அது நல்ல மாற்றங்களை ஏற்படத்தக்கூடியது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அஸ்ஸாமில் உள்ள மலைகளில் தொடங்கி டாா்ஜீலிங், நீலகிரி வரை தேயிலை உற்பத்தி விரிவடைந்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழிலாக வளா்ந்துவிட்டது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்பட ஏற்றுமதியிலும் தேயிலை தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகரித்துவிட்டது’ என்றாா்.

2015-இல் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அரசுகளுக்கிடையேயான குழுவில் இந்தியாவின் முன்மொழிவைத் தொடா்ந்து 2019-இல் மே 21-ஆம் தேதியை சா்வதேச தேநீா் தினமாக ஐ.நா. அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக... மேலும் பார்க்க