செய்திகள் :

ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்டின் லதேஹார் மாவட்டத்தில், மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியோர் இணைந்து இன்று (மே 24) அதிகாலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, லதேஹார் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களில், மாவோயிஸ்டுகளின் கிளை அமைப்பான ஜார்க்கண்ட் ஜன் முக்தி பரிஷான் எனும் அமைப்பின் தலைவரான பப்பு லோஹரா மற்றும் அவருடன் செயல்பட்டு வந்த பிரபாத் கஞ்சு ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதில், பப்பு என்பவரைப் பிடிக்க காவல் துறையினர் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடிவந்த நிலையில் இன்று அவர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் மூலம் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இன்று முற்பகலில் கரையைக் கடக்கிறது தாழ்வு மண்டலம்! என்ன நடக்கும்?

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப... மேலும் பார்க்க

ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!

கம்யூட்டர் மற்றும் பந்தய பைக்குகளுக்கு பெயர்பெற்ற ஹோண்டா நிறுவனம் ஹார்னெட் மாடலில் 1000 சிசி கொண்ட புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலா... மேலும் பார்க்க