செய்திகள் :

`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட்டம்... விவரம் என்ன?

post image

'புகாரளித்த சவுக்கு சங்கர்!'

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை சார்புச் செயலாளரை சந்தித்து, தன்னுடைய ஊடக அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

'குற்றஞசாட்டும் சவுக்கு சங்கர்!'

அவர் பேசியதாவது, 'சவுக்கு ஊடகத்தை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சென்னை மாநகராட்சி ஆணையாளர் அருண் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சவுக்கு மீடியாவை சேர்ந்த கேமரா மேன் ஜெயப்பிரகாஷ், வீடியோ எடிட்டர் சத்யமூர்த்தி ஆகியோரை நேற்றிரவு 11:30 மணியளவில் கே.கே.நகர் மற்றும் திருமங்கலம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் வீட்டிற்கே வந்து அழைத்து சென்றிருக்கின்றனர்.

2023 இல் ஜெயப்பிரகாஷ் ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றதாக சொல்கிறார்கள். அபராதம் மட்டுமே கட்டும் அளவுக்கான தவறுக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்வது நியாயமா? ஊடகத்தில் நான் பேசும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியுமா? துப்புரவு தொழிலாளர்களுக்கு கழிவு நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கிய விவகாரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகையோடு இணைந்துகொண்டு காவல்துறை ஆணையர் அருண் இப்படியெல்லாம் செய்கிறார். இப்போது அருண் மீது புகாரளித்துவிட்டு வந்திருக்கிறேன். அருண் தனது அதிகாரத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வருகிறார். அதை தமிழகத்தின் பொம்மை முதல்வர் வேடிக்கைப் பார்த்து வருகிறார்.' என்றார்.

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் 'ரஷ்யாவின் நிழற் கடற்படை' யைச் சுட்டிக்காட்டி தடைகளை விதித்துள்ளன. மேற்குலக நாடுகள், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்து... மேலும் பார்க்க

'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' - தவெக அறிக்கை!

'அரக்கோண சம்பவம் - தவெக கண்டனம்!'அரக்கோணத்தில் திமுக-வின் இளைஞரணியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்திருக்கும் பாலியர் புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்... மேலும் பார்க்க

Trump: ட்ரம்ப்பால் சரிந்த Apple பங்குகள் - என்ன பின்னணி?

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறது.2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையில் 22 மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரி... மேலும் பார்க்க

சாகோஸ் தீவுகளை மீண்டும் பெற்ற மொரீஷியஸ்; பிரிட்டன் வைத்த 'ராணுவ நிபந்தனை' என்ன?

அறுபது ஆண்டுகள் கழித்து சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து அரசு. நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீண்ட நாள்கள் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய... மேலும் பார்க்க

'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்

‘அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்கள்’ என முதல்வர் ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார். இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர்... மேலும் பார்க்க