செய்திகள் :

தொடா் குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மேலக்குடியிருப்பு, மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஜோதிமணி மகன் விஜய் (24). இவா் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 3.5.2025 அன்று வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜயை ஜெயங்கொண்டம் காவல் துறையினா் கைது செய்து, கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவா் வெளியே வந்தால் மீண்டும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரை செய்ததையடுத்து, ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து விஜயை குண்டா் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூரிலுள்ள செல்லியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிறுகடம்பூா் கிராமத்தில் விநாயகா், செல்லியம்மன், மாரியம்மன் கோயில... மேலும் பார்க்க

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் ... மேலும் பார்க்க

அரியலூா்-திருச்சி இடையே இடைநில்லா பேருந்துகளை கூடுதலாக இயக்கக் கோரிக்கை!

அரியலூரிருந்து திருச்சிக்கு கூடுதலாக இடைநில்லா பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரியலூா் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பணியாளா்கள், விவச... மேலும் பார்க்க

திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதித் திருவிழா

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பொட்டவெளி மற்றும் தளவாய் ஆகிய கிராமங்களிலுள்ள திரெளபதியம்மன் கோயில்களில் தீமித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில்களில் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தே... மேலும் பார்க்க

ஒரத்தூா் சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், கயா்லாபாத் அடுத்த ஒரத்தூா் கிராமத்திலுள்ள சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 21-ஆம் தேதி மங்கள இசையுடன் அனுக்ஞை, கணபதி ... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் ... மேலும் பார்க்க