செய்திகள் :

உத்தரகண்டில் முதல் எஃப்எம் வானொலி நிலையம் அறிமுகம்

post image

உத்தரகண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தால் இயக்கப்படும் முதல் எஃப்எம் வானொலி நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ராணுவத்தின் மத்திய கட்டளையின் பொது அதிகாரி அனிந்தியா சென்குப்தா தொடங்கி வைத்தார். இதுகுறித்து வானொலி நிலையத்தின் மேலாளர் மணீஷ் சிங்கால் கூறுகையில், இந்திய ராணுவத்திற்கும் எல்லைப் பகுதி மக்களுக்கும் இடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம்.

ஆபரேஷன் சத்பாவனா'வின் கீழ் இயக்கப்படும் சமூக வானொலி நிலையத்திற்கு 'பஞ்ச்சுல் பல்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 88.4 என்கிற அலைவரிசையில் எஃப்எம் ஒலிபரப்பப்படும். இந்திய ராணுவத்தின் 'பஞ்ச்சுல் படைப்பிரிவின்' ராணுவ பொதுப் பள்ளியில் இருந்து இந்த வானொலி நிலையம் இயக்கப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு: 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்

வானொலி நிலையத்திலிருந்து 12 கிமீ சுற்றளவில் உள்ள மக்களால் வானொலியைக் கேட்க முடியும். உள்ளூர் வரலாறு, கலாச்சாரம், சமூகம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை போன்ற எல்லைப் பகுதி மக்களின் தொழில்களில் இதன் நிகழ்ச்சிகள் சிறப்பு கவனம் செலுத்தும்.

தியாகிகள், துணிச்சலான வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக மற்றும் கலாசாரத் துறைகளில் பணியாற்றியவர்களின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இது மேலும் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க