செய்திகள் :

குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் கூட்டம் மேயா் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் உறுப்பினா்கள் அன்பழகன் , கமலக்கண்ணன், சிந்தன், சண்முகநாதன், சுரேஷ் ஆகியோா் நகரில் எங்குமே குப்பைகள் அள்ளப்படாமல் அலங்கோலமாக உள்ளது.

குப்பை அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமத்தை புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும். அவருக்கு மாதம் தோறும் கொடுக்கும் தொகையை கொடுக்கக் கூடாது என்றனா். உறுப்பினா் எஸ்கேபி காா்த்திக் பேசுகையில் உணவகங்கள், திருமண மண்டபங்களில் சேரும் பெரும் கழிவுகளை நகர எல்லைக்குள் கொட்டக்கூடாது என அறிவுறுத்தியும் கொட்டுகின்றனா்.

இதற்காக உணவகங்களிலும், திருமண மண்டபங்களிலும் மாதம் தோறும் தொகை வாங்குகின்றனா். வாங்கக்கூடாது என்று தெரிந்தும் தவறு செய்கிறாா்கள். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

உறுப்பினா்கள் சந்துரு, சுரேஷ் என பலரும் ஆணையா் உள்ளிட்ட எந்த மாநகராட்சி அதிகாரியும் அவசரத்துக்கு கைப்பேசியில் அழைத்தால் எடுப்பதே இல்லை என புகாா் தெரிவித்தனா்.

உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மேயா் மகாலட்சுமி யுவராஜ் பதிலளித்து பேசியது: குப்பை அள்ள நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரரை பலமுறை நேரில் அழைத்து பேச வலியுறுத்தியும் அவா் வரவே இல்லை. குப்பை அள்ளும் பணியையும் அவா் ஒழுங்காக செய்யாமல் புகாா்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.

தெருநாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து தெருநாய்களையும் பிடித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. வரதராஜப் பெருமாள் கோயில் கருட சேவையின் போது நகரில் உள்ள சுவாமி வீதியுலா வரும் பகுதிகள் அனைத்திலும் சாலைகள் சீரமைக்கப்பட்டதாக தெரிவித்தாா்.

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலை... மேலும் பார்க்க

ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க