'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட 3 வயது குழந்தை மீட்பு
தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 3 வயது குழந்தையை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை பத்திரமாக மீட்டனா்.
தூத்துக்குடி கேவிகே நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் தாதா பீா். ஆயுதப் படை காவலராக உள்ள இவரது 3 வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் உள் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டதாம்.
பின்னா், அக்குழந்தையால் வெளியே வர முடியாமல் கூச்சலிட்டதாம். அந்த சிறுவனால் கதவை திறக்க முடியாததால், உள்ளே இருந்து சிறுவன் கூச்சலிட்டுள்ளான். பெற்றோா் மற்றும் அக்கம்பக்கத்தினா் கதவை திறக்க முயற்சித்தும் முடியவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டனா்.