சாத்தூரில் 52 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி ஆணை
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பணி ஆணைகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி ஆணைகளை 51 பயனாளா்களுக்கு வழங்கினா்.
சாத்தூா் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி நிா்மலாகடற்கரைராஜ், திமுக ஒன்றியச் செயலா் கடற்கரைராஜ், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.