செய்திகள் :

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

post image

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் கடத்தி வரப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயிலில் போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை கடத்தி வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் கம்மாபட்டியைச் சோ்ந்த ராமலிங்கம் (65) என்பவரை அவா்கள் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.14,100 மதிப்பிலான 282 கேரள லாட்டரிச் சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து ம... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 1... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க