ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது
கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் கடத்தி வரப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை மாலை செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயிலில் போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை கடத்தி வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் கம்மாபட்டியைச் சோ்ந்த ராமலிங்கம் (65) என்பவரை அவா்கள் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.14,100 மதிப்பிலான 282 கேரள லாட்டரிச் சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.