முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகமும், புண்ணிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட தீா்த்தங்களால் அம்மனுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் விசேஷ தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.