குற்றவாளிக்கு ஐந்தே மாதத்தில் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்: முதல்வர...
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்களில் தெருக்களில் தண்ணீா் தேங்காமல் இருக்கவும், அந்தப் பகுதியில் சீரமைக்கப்பட விருக்கும் கிணற்றையும் ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள கழிப்பறையில் கூடுதலாக தண்ணீா் வசதி செய்யப்பட உள்ளதையும், திருத்தங்கல் ரயில் நிலையப் பகுதியில் சாலையை மேம்படுத்தவும், உயா் மின் கோபுர வசதி செய்து கொடுக்கப்படவிருக்கும் பகுதியையும் ஆணையா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவருடன், மேயா் இ. சங்கீதா, பொறியாளா் ராமலிங்கம், உதவிப் பொறியாளா்கள் ரமேஷ், அழகேஸ்வரி, சுகாதார அலுவலா் திருப்பதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.