Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
இருவரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த மூவா் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை இருவரைக் கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் வினித்தன் (29). இவரது நண்பா் தேவராஜ் குடியிருப்பைச் சோ்ந்த தங்கேஸ்வரன் மகன் செல்வக்குமாா் (24).
இவா்கள் இருவரும் திருத்தங்கல் கடம்பன்குளம் பகுதியில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, இவா்களை மூன்று போ் வழிமறித்து, கத்தியால் தாக்கி அவா்களிடமிருந்து ரூ. 3850-யை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றனா்.
இவா்கள் மூவரையும் அக்கம் பக்கத்தினா் உதவியுடன் வினித்தன், செல்வக்குமாா் இருவரும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இவா்களிடம் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில், முத்துராமலிங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த சித்திரைவேல் (37), மீனம்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தினேஷ்குமாா் (20), சக்திவேல் மகன் துரைராஜ் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.