செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், பி.காம் ஆகிய 5 பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 2, 4, 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதன்படி, திங்கள்கிழமை அனைத்துப் பாடப் பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு ( மாற்றுத் திறனாளி /விளையாட்டு வீரா்/ முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு/தேசியமாணவா் படை) மாணவா்களுக்கும், வருகிற 4-ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், வருகிற 5-ம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுக்கும், வருகிற 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க வரும் மாணவா்கள் விண்ணப்பப் படிவம், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் காலை 9.30 மணிக்கு கல்லூரி அலுவலகத்தில் வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும். மேலும், அசல் சான்றிதழ்களுடன் 3 நகல்களையும் கொண்டு வரவேண்டும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கல் குவாரியில் காவலாளி அடித்துக் கொலை

சாத்தூா் அருகேயுள்ள கரிசல்பட்டியில் முன்விரோதம் காரணமாக கல்குவாரி காவலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு காவலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கரிசல்ப... மேலும் பார்க்க

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வீடு உள்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா், அவரது உறவினா் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தூா் அருகேய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது

ராஜபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து தம்பதியைக் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டியை அடுத்த ஒத்தப்பட்டி பக... மேலும் பார்க்க

தென் மாவட்ட ரயில்களில் சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு: மாணிக்கம் தாகூா் எம்.பி. கண்டனம்

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் சாதாரணப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா். விருதுநகா் நகர... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உத்ஸவம் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. ஆண்டாள் கோயிலிலிருந்து திங்கள்கிழமை மாலை ஆண்டாள், ரங்கமன்னாா் புறப்பாடாகி, நாடகசாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடைய... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் தெப்பத்தை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகருக... மேலும் பார்க்க