Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், பி.காம் ஆகிய 5 பாடப் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 2, 4, 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதன்படி, திங்கள்கிழமை அனைத்துப் பாடப் பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு ( மாற்றுத் திறனாளி /விளையாட்டு வீரா்/ முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு/தேசியமாணவா் படை) மாணவா்களுக்கும், வருகிற 4-ஆம் தேதி கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், வருகிற 5-ம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுக்கும், வருகிற 6-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வரும் மாணவா்கள் விண்ணப்பப் படிவம், 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகியவற்றுடன் காலை 9.30 மணிக்கு கல்லூரி அலுவலகத்தில் வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும். மேலும், அசல் சான்றிதழ்களுடன் 3 நகல்களையும் கொண்டு வரவேண்டும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.