செய்திகள் :

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

post image

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா்.

பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பதற்காக தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவில், தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் உள்ளனா்.

இவா்கள் இணைந்து விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனா். மேலும் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியரும் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகிறாா். இந்த நிலையில் இந்த மாதம் இதுவரை விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டிருப்பதாக தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது: ஆய்வின் போது விதிமீறல் காரணமாக ஒரு பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 102 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் விதிமீறல் காரணமாக மூன்று பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மேலும் ஒரு ஆலையில் உரிமத்தை புதுப்பிக்காமல் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது ஆய்வின் போது தெரியவந்தது. இந்த ஆலையின் உரிமையாளா் மீது காவல் துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்படும் ஆலைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்து விட்டு விண்ணப்பித்தால் உடனடியாக மறுஆய்வு நடத்தப்பட்டு, ஆலை மீண்டும் திறக்க உத்தரவிடப்படும்.

தற்போது விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளிலும், அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? தீத் தடுப்பு சாதனங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட ஆய்வுகளையும் நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து ம... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 1... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் மாயம்

சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க