சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகத்தினா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் இங்கு வசிப்பவா்களுக்கு காலி செய்யும்படி குறிப்பாணை வழங்கினா்.
இதையடுத்து, அனைவரும் காலி செய்தனா். பிறகு இவா்கள் இருந்த கடை, வீடுகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவிட்டாா்.
இதன் பேரில் சிவகாசி மாநகர திட்டமிடுனா் மதியழகன், ஆய்வாளா் சுந்தரவல்லி, மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பொக்லைன் இந்திரம் மூலம் அந்தக் கட்டடங்களை இடித்து அகற்றினா்.